Editorial / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
புத்தளம்-மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில், நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம்- முல்லியபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 27 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புத்தளம்-அபயராம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய மூவரும், மாரவில-மரதவில்ல மற்றும் வென்னப்புவ புதிய வீதி ஆகிய பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
3 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
43 minute ago
52 minute ago