2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்

Princiya Dixci   / 2016 ஜூன் 25 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் செயற்றிட்டமானது, அரச தகவல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் ரங்கே கலன்சூரிய தலைமையில் அநுராதபுரம் தீபானி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அநுராதபுர மாவட்டத்தின் ஊடக மற்றும் தொடர்பாடல் தொடர்பிலான கற்கைநெறிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் செயலமர்வில் இவ்விடயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.

இச்செயற்றிட்டத்தின் பிரதான கலந்துரையாடலை, அரச தகவல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் ரங்க கலன்சூரிய மேற்கொண்டார்.

ஏனைய செயற்றிட்டம் தொடர்பிலான குறைபாடுகள் குறித்து, சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் விக்ரமநாயக மற்றும் அரச தகவல் திணைக்கள கலந்துரையாடல் தொடர்பிலான உதவி ஆலோசர் நிலுபுல் பிரியங்கர பெரேரா ஆகியோர் மேற்கொண்டனர்.

இந்திய மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டங்கள், புரட்சிகளை மேற்கொண்டு பெற்றுக்கொண்ட உரிமையே கருத்துச் சுதந்திரம்.

இச்சட்டத்தின் பிரகாரம் மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய அநுகூலங்கள் என்ன என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்துவதற்கான செயற்பாடாகக் கொள்ளலாம்.

கருத்துத் தெரிவிக்கும் சட்டம் தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் செயற்பாட்டில், 4 ஆயிரம் அரசாங்கத் திணைக்களங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X