Princiya Dixci / 2017 மார்ச் 05 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புழுதிவயல் மற்றும் விருதோடை கிராமங்களை உள்ளடக்கிய வகையில் தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை, புழுதியவயல் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நாளை (6) காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.
15 வயதைப் பூர்த்தி செய்த தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், தே.அ.அ தெளிவின்மை மற்றும் தே.அ.அ தொலைந்தவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும்.
குறித்த நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விரும்புவோர், பிறப்புச்சான்றிதழின் பிரதி, அடையாள அட்டைக்கான 6 வர்ணப் புகைப்படங்கள், 15 மற்றும் 35 ரூபாய் பெறுமதியான முத்திரை, நீளமான கடித உறை என்பனவற்றுடன் சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago