2024 மே 02, வியாழக்கிழமை

நின்றிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

Editorial   / 2024 மார்ச் 01 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

உடப்பு. ஆண்டிமுனைக் கிராமத்தில்  உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் நின்றிருந்த சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த உடப்பு ஐந்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய முத்துச் செல்வம் தனுஜன் என்ற இளைஞன் மீது அந்த சுவர் இடிந்து விழுந்ததில் அவ்விளைஞன் உயிரிழந்துள்ளார்.

உடப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக   சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் அந்த இளைஞன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 வியாழக்கிழமை (29) இடம்பெற்ற சம்பவத்தில் மரணமடைந்த இளைஞனின்,  சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .