2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புத்தளம் மாவட்டத்தில் கடும் மழை

Editorial   / 2020 செப்டெம்பர் 09 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (09) அதிகாலை முதல் கடும் மழை பெய்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மழை வௌ்ளத்தையடுத்து, ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், நீர் பெருக்கெடுத்து வெளியேறுவதால், தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்தமையால், பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

சில வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியதால், பொதுமக்கள், வாகன சாரதிகள் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .