A.P.Mathan / 2014 செப்டெம்பர் 24 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் இலங்கையின் முன்னணி பட்டமளிப்பு கல்வியகமான SLIITஉடன் இணைந்து வருடாந்த பல்ககைக்கழக ஒன்றுகூடல் தினத்தை செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளது. SLIIT மாலபே கம்பஸ் இல் இடம்பெறவுள்ள இந்த பல்கலைக்கழக தின நிகழ்வு காலை 8.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறும். இந்த பல்கலைக்கழக தினத்தின் போது பெற்றோர்கள் மற்றும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு SLIIT இன் வெளிநாட்டு பாடத்திட்டங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழக மாற்றல் வாய்ப்புகள், புலமைப்பரிசில்கள் மற்றும் வசதிகள் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .