2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முதல் 4 மாதங்களின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அரை மில்லியன்

A.P.Mathan   / 2014 மே 07 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதத்தில், இலங்கைக்கு இந்த ஆண்டில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அரை மில்லியனை கடந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் மூலம் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தமாக 112,631 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததாகவும், இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 39.5 வீத அதிகரிப்பாகும். நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் மொத்தமாக 534,132 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இது கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.6 வீத அதிகரிப்பாகும்.

மேற்கு ஐரோப்பாவிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X