2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் ப்ளுசிப் பங்குகள் மீது அதிகளவு நாட்டம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்குச்சந்தையின் மொத்தப்புரள்வில் மொத்த வியாபாரம் ஆதிக்கம் செலுத்தியிருந்ததுடன், ப்ளுசிப்கள் மீதும் அதிகளவு நாட்டம் காணப்பட்டது. ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளை கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் அதிகளவு நாட்டம் காண்பித்திருந்தனர். பங்குச்சந்தையின் மொத்த கொள்வனவில் 74.6 வீதமான பங்கு கொள்வனவை இவர்கள் மேற்கொண்டிருந்தனர். சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் குட் ஹோப் ஆகிய பங்குகளின் விலைகளில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, சந்தை சரிவை எதிர்நோக்கியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா ஆகியன குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. பான் ஏசியன் பவர் மற்றும் PCH ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிகளவு நாட்டம் காண்பித்திருந்தனர்.
 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை வழங்கியிருந்தது. (ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி பங்களிப்புடன்) இந்த துறை 0.41% சரிவை பதிவு செய்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி பங்கொன்றின் விலை 0.50 ரூபாவால் (0.35%) அதிகரித்து 145.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 1,462,418 பங்குகளால் அதிகரித்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் (0.09%) உயர்ந்து 114.50 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. சம்பத் வங்கி பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் (0.06%) உயர்ந்து 166.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. 
 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் இரண்டாவது அதிகளவு பங்களிப்பை பன்முகத் துறை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்களிப்புடன்) இந்த துறை 0.75% உயர்வை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 3.40 ரூபாவால் (1.59%) அதிகரித்து 217.90 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 252,186 பங்குகளால் அதிகரித்திருந்தது.
 
நெஸ்லே லங்கா பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதியுயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. பங்கொன்றின் விலை 31.80 ரூபாவால் (1.70%) அதிகரித்து 1900.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .