2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரிப்பால் ரூபாவின் பெறுமதி சரிவு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரித்து காணப்பட்டதால், ரூபாவின் பெறுமதி நேற்று சரிவடைந்து காணப்பட்டது. தொடர்ந்தும் குறைந்த வட்டி வீதங்கள் காரணமாகவும், அதிகளவு இறக்குமதி மற்றும் கடன் வழங்கல்கள் அதிகரிப்பின் காரணமாகவும், இந்த பெறுமதி மேலும் வீழ்ச்சியடையலாம் என நாணயமாற்று முகவர்களின் மூலம் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் நாணயமாற்று நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 130.64/67 ஆக பதிவாகியிருந்தது. இறக்குமதியாளர்களுக்காக அரச வங்கிகள் டொலர்களை கொள்வனவு செய்ததை தாம் அவதானித்ததாக நாணயமாற்று முகவர்கள் தெரிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .