2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சேமிப்பு அலகு திறப்பு

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


பிரதேச அபிவிருத்தி வங்கியின்  களுவாஞ்சிகுடி கிளை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூரத்;தியினை முன்னிட்டு வியாழக்கிழமை (13)
மட்.பட்டிருப்பு களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பாடசாலை சேமிப்பு அலகு ஒன்று திறந்து வைக்கபட்டது.

பாடசாலை அதிபர் பொன்.வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய பொது முகாமையாளர் டி.ரி.எம்.எஸ்.குமார மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம், களுவாஞ்சிகுடி கிளை முகாமையாளர் ஜே.கே.பிரான்சிஸ், மற்றும் மட்டக்களப்பு மவட்டத்திலுள்ள வங்கிகளின் முகாமையாளர்கள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை சேமிப்பு அலகிற்கு இப்பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் கல்வி பொதுத்தர உயர்தரத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் முகாமையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 39 மாணவர்கள் தமக்குரிய சேமிப்புக் கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் பொன்.வன்னியசிங்கம் தெரிவித்தார்.

இதன்போது சேமிப்பினை ஆரம்பித்த மாணவர்களுக்கு வங்கி அதிகாரிகளினால் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .