2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


தமிழ் சிங்கள விடுமுறை மற்றும் பெரிய வெள்ளி பொது விடுமுறை காரணமாக, கடந்த வார பங்குச்சந்தை நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இடம்பெற்றிருந்தது. பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் உயர்வான பெறுமதிகளை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதான ஈடுபாடு பெருமளவு சந்தை உயர்ந்த பெறுமதிகளில் பங்களிப்பு செலுத்தியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்குகள் கொள்வனவில் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். வியாழக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,180.76 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3388.02 ஆகவும் பதிவாகியிருந்தன.

ஏப்ரல் 16ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 1,409,250,936 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 9,742 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 9,308 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 434 ஆகவும் பதிவாகியிருந்தன.

புதன்கிழமை
இரண்டு மாதங்களில் பதிவாகிய உயர் பெறுமதிகளை பதிவு செய்து சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடைந்திருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி 700 மில்லியன் ரூபாவை எய்தியிருந்தது. கார்கில்ஸ், புக்கிட் தாரா மற்றும் சிலோன் டீ சேர்விசஸ் ஆகிய பங்குகளின் விலைகள் உயர்ந்திருந்தன. வங்கிகளின் பங்குகள் மீது உயர் பெறுமதி வாய்ந்த பெறுபேறுகள் பதிவாகியிருந்தன. செலான் வங்கி மற்றும் றோயல் செரமிக்ஸ் பங்குகள் மீது நிறுவன சார் ஈடுபாடுகள் காணப்பட்டது. லங்கா ஐஓசி பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. மேலும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது வெளிநாட்டவர்கள் கொள்வனவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

வியாழக்கிழமை
பிரதான சுட்டிகள் நேர்பெறுமதியை பதிவு செய்திருந்தன. புத்தாண்டை தொடர்ந்து நேர்த்தியான பெறுபேறுகள் சந்தையில் தொடர்ந்திருந்தது. புரள்வு பெறுமதி 600 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. வங்கித்துறையை சேர்ந்த பங்குகள் மீதான உயர்ந்த பெறுமதி அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி போன்ற பங்குகள் மீது சிறியளவு முதலீட்டாளர்களின் ஈடுபாடு அதிகம் காணப்பட்டது. செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. புரள்வு பெறுமதியில் இது 28 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது. வெளிநாட்டு செயற்பாடுகள் உறுதியானதாக பதிவாகியிருந்ததுடன், அதிகளவு கொள்வனவும் பதிவாகியிருந்தது.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிலோன் பிரின்டர்ஸ், ஏஐஏ இன்சூரன்ஸ், ஷலிமர், ஜி.எஸ்.ஃபினான்ஸ் மற்றும் மேர்க். சிப்பிங் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

பீசி ஹவுஸ், பன்செய் றிசோர்ட்ஸ், சிஐஎஃவ்எல், டெஸ் அக்ரோ (சாதாரண) மற்றும் ரம்பொட ஃபோல்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 46,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. கடந்த வார பெறுமதியை விட இந்த வாரம் தங்கத்தின் விலை உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய மாற்று விகிதம்

கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.02 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 222.87    ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X