2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை, நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 மே 18 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


விடுமுறை நிறைந்த வாரத்தில், பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ச்சியான உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. ப்ளுசிப் பங்குகளின் கொள்வனவில் அதிகளவானோர் ஆர்வத்தை வெளிப்படுத்தியமை, பங்குச்சந்தை உயர்ந்த பெறுமதிகளை பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது. சியெர்ரா கேபிள்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டு அறிக்கைகளில் பூர்த்தி செய்யப்படாத விபரங்களை உள்ளடக்கி வெளியிட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்ததால், அதன் பங்குகள் பெருமளவில் குறைந்த விலையில் கைமாறியிருந்தன. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,315.19 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3479.17 ஆகவும் பதிவாகியிருந்தன.

மே 12ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,237,775,541 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 17,198 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 16,471 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 727 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை
சந்தை நடவடிக்கைகள் தொடர்ச்சியான நான்காவது நாளாக நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி 800 மில்லியனை கடந்திருந்தது. செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சியெர்ரா கேபிள்ஸ் பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு காணப்பட்டது. செலான் வங்கி மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை காண்பித்திருந்தனர். வெளிநாட்டவர்களின் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்ந்திருந்ததுடன், புரள்வு பெறுமதியில் 44 வீதத்தை அவர்கள் பங்களிப்பு செய்திருந்தனர்.

செவ்வாய்க்கிழமை
பிரதான சுட்டிகள் சரிவுகளுடன் நிறைவடைந்திருந்தது, புரள்வு பெறுமதி 700 மில்லியனை கடந்திருந்தது. ஷலிமர் பங்குகள் மீது நிறுவனசார் ஈடுபாடு காணப்பட்டது. செலிங்கோ இன்சூரன்ஸ் பங்குகள் மீது உயர் நிகர பெறுமதியான ஈடுபாடு காணப்பட்டது. கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. சியெர்ரா கேபிள்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டர்ளர்கள் ஈடுபாட்டை காண்பித்திருந்தனர். ஆயினும், 10-11 முதல் 13-14 வரையிலான காலப்பகுதிக்கான நிதியாண்டறிக்கைகளில் தவறான விபரங்களை சமர்ப்பித்திருந்தமையால் பங்கு கொடுக்கல் வாங்கல் தடை செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர், புரள்வு பெறுமதியில் 43 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது.

வெள்ளிக்கிழமை
விடுமுறைகளை தொடர்ந்து, குறுகிய வாரம் என்பது, சிலோன் டொபாக்கோ கம்பனி, ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் நெஸ்லே லங்கா ஆகிய பங்குகள் மீது விலை உயர்வுகள் பதிவாகியதை தொடர்ந்து நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா மற்றும் லங்கா வோல் டைல்ஸ் ஆகியன புரள்வு பெறுமதி உயர்வடைவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தன. புரள்வு பெறுமதி 1.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. இதேவேளை, டோக்கியோ சீமெந்து பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்கள் சந்தையின் புரள்வு பெறுமதியில் 74 வீதத்துக்கு பங்களிப்பை செலுத்தியிருந்தனர்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் மொரிசன்ஸ், மிரமர், அக்மி, எஸ்எம்பி லீசிங் (உரிமை) மற்றும் இந்தோமலே போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

சிலோன் லெதர் (உரிமை), டங்கரீன், ஈக்குவிட்டி டூ பிஎல்சி, ஏசியா அஸெட்  மற்றும் மல்டி ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,250 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.91 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 222.93    ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X