Editorial / 2020 மே 13 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து பரவி வரும் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் முகமாக, கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்திற்கு, Rainco (Pvt) Ltd. நிறுவனம் ஒரு தொகுதி தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE) நன்கொடையாக வழங்கியுள்ளது.
ரூ. 2.4 மில்லியன் பெறுமதியான இந்தப் பொருட்கள், இலங்கை இராணுவத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது. PPE க்களை கையளிக்கும் இந்த வைபவத்தில், Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி அஹமட் அரூஸ், முகாமைத்துவப் பணிப்பாளர் பஸால் பௌஸ் மற்றும் டென்டர்கள் மற்றும் சட்ட விவகாரங்கள் பிரிவின் தலைவர் பிரசன்ன சந்திரசிரி ஆகியோர் நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.
3 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
32 minute ago