2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கமட்ட சன்னிவேதனய திட்டத்துக்கு SLT-MOBITEL ஆதரவு

S.Sekar   / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, கமட்ட சன்னிவேதனய திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் முதலாவது கிராமிய 4G கோபுரத்தை நிறுவியுள்ளது. இலங்கைக்கு 100% 4G LTE இணைப்புத்திறனை ஏற்படுத்துவதற்கு வலுவூட்டும் வகையில் இந்த கமட்ட சன்னிவேதனய திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குருநாகல், ஹிருவல்பொலவில் நிறுவப்பட்டுள்ள இந்த கோபுரத்தை இலங்கை தொலைத்தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குருநாகல், ஹிருவல்பொல கிராமங்களைச் சேர்ந்த சகலருக்கும் அவசியமான இணைப்பு உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. புரோட்பான்ட் அடிப்படையிலான வாடிக்கையாளர் மற்றும் நிறுவனசார் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், TRCSL இன் கமட்ட சன்னிவேதனய திட்டத்தின் சகல இலங்கையர்களுக்கும் சிறந்த இணைப்புத்திறனை ஏற்படுத்திக் கொடுக்கும் இலக்குக்கு பங்களிப்பு வழங்குகின்றது.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில் SLT-MOBITEL இனால் புத்தாக்கமான டிஜிட்டல் மாற்றியமைப்பு படிமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், NB-IOT, 5G, AI மற்றும் Big Data ஆகிய புது யுக தொழில்நுட்பங்களை பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான பணிகளையும் மேற்கொள்கின்றது.

வலையமைப்பு சிறப்பை வெளிப்படுத்தி SLT-MOBITEL மொபைல் தொடர்ச்சியாக சர்வதேச இணைய வேக பரிசோதனை அமைப்பான Ookla வினால், 2019, 2020 மற்றும் 2021 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இலங்கையின் வேகமான மொபைல் வலையமைப்பாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்பு பணிகளில் மத்திய பணியாக இதுவரையில் SLT-MOBITEL இனால் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அத்துடன், 5G உடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களான பரிசோதனை, பரீட்சிப்பு மற்றும் பொது மக்களுக்கான விளக்கமளிப்புகள் போன்றவற்றுக்காக ரூ. 1.5 பில்லியனை பயன்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X