2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

செயற்கட்டமைப்பு மாற்றத்துக்கு தயாரென SLT-MOBITEL அறிவிப்பு

S.Sekar   / 2022 ஜூலை 29 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, அத்தியாவசிய சேவைகள் மற்றும் துறைகளை மேம்படுத்துவது மற்றும் குடிமக்களை டிஜிட்டல் முறையில் வலுவூட்டுவது தொடர்பான தேசிய திட்டத்தை முன்மொழிவது பற்றி அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த செயற்பாட்டாளர்களில் ஒன்றாகத் திகழும் SLT-MOBITEL, நாட்டில் செயற்கட்டமைப்பு மாற்றத்தை துரிதமாக மேற்கொள்ள வேண்டியதன் தேவைக்கான காரணங்களாக தொன்மை வாய்ந்த சட்ட கட்டமைப்புகள், வினைத்திறன் இன்மை, மோசடி, பெருமளவு செயற்பாட்டு செலவுகள் மற்றும் பிரதான துறைகள் மற்றும் சேவைகளில் நிலவும் விரயம் போன்றன காரணங்களாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

SLT-MOBITEL இனால் முன்மொழியப்பட்டுள்ள புதிய செயற்திட்ட மாற்றத்துக்கான அடித்தளம் டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட மக்கள் என்பதாக அமைந்திருப்பதுடன், அடையாளங்களின் டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் உறுதியான டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பிரத்தியேக கட்டமைப்பு என்பதை குறிக்கின்றது. நாட்டுக்கு முக்கியமான சகல பிரிவுகளிலும் டிஜிட்டல் வணிக மற்றும் e-ஆளுகை ஆகியவற்றை அறிமுகம் செய்வதற்கு புதிய தொழில்நுட்ப புத்தாக்கங்களை கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கும். சுகாதார பராமரிப்பு, கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீதி மற்றும் வங்கியியல் மற்றும் நிதியியல் போன்றவற்றை அத்தியாவசிய முக்கியமான சேவைகளாக இனங்கண்டுள்ளதுடன், இந்த புதிய கட்டமைப்பின் கீழ் அதிகளவு வினைத்திறனாகவும் வெளிப்படையாகவும் இயங்கும்.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ இந்த புதிய கட்டமைப்பு பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “சிங்கப்பூரில் முன்னெடுக்கப்பட்டதைப் போல, மதிநுட்பமான தேசம் (Smart Nation) ஆக மாற்றம் பெறக்கூடிய வாய்ப்புகள் இலங்கையில் காணப்படுகின்றது. அதனூடாக புத்தாக்கமான தொழில்நுட்பத்தை ஒவ்வொரு செயற்பாட்டின் முதுகெலும்பாக திகழச் செய்யக்கூடியதாக இருக்கும். இதை முன்னெடுப்பதனூடாக நாடு எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்பதுடன், முக்கியமான துறைகள் மற்றும் சேவைகள் அதிகளவு வினைத்திறன் வாய்ந்த, வெளிப்படையான, இலாபமீட்டக்கூடிய கட்டமைப்புகளாக மாற்றமடைந்து, மக்களின் வாழ்க்கைக்கு பெரிதும் பயனளிப்பதாக அமைந்திருக்கும். நாட்டை E-ஆளுகையை (e-governance) நோக்கி நகர்த்துவது எமது நோக்காக அமைந்துள்ளது. பெறுமதி சங்கிலியில் நாம் பரந்தளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், தொழில்நுட்ப நிறுவனங்கள், பாரிய கூட்டாண்மை நிறுவனங்கள், பொது மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஒப்பற்ற திறனையும் கொண்டுள்ளோம். எமது ஆற்றல்கள் மற்றும் நாட்டில் கொண்டுள்ள உறுதியான உட்கட்டமைப்பினூடாக, இந்த சவாலை எதிர்கொள்வதற்கு நாம் முழுமையாக தயார் நிலையிலுள்ளோம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

160 வருடங்களுக்கு முன்னர் அரச உடைமையில் அமைந்த தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநராக தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த SLT-MOBITEL, கடந்த காலங்களில் தனது செயற்பாடுகளை மேம்படுத்தி மாற்றியமைத்துள்ளதுடன், அதிகளவு இலாபகரமான மற்றும் வினைத்திறனான பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக திகழ்கின்றது. இந்நிறுவனத்தினால் தொழில்நுட்பம் மற்றும் இணைப்புத் தீர்வுகள், உடனடியாக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப கட்டமைப்புகள், மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு முதுகெலும்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் போன்றன வழங்கப்படுகின்றன.

பெர்னான்டோ மேலும் குறிப்பிடுகையில், “2020 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த SLT-MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்பு செயற்பாட்டினூடாக சிறந்த நிலையான மற்றும் மொபைல் தொழில்நுட்ப சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. உரிய காலத்தில் இந்த ஒன்றிணைவு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அந்த ஆண்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தொழில்நுட்பம் மற்றும் இணைப்புத் தீரவுகளுக்கான கேள்வி பெருமளவில் அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்பை புரிந்து கொண்டு, எதிர்கால கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில், எமது fibre வலையமைப்பை இலங்கையின் 65,000 கிலோமீற்றர் பகுதிக்கு வியாபித்திருந்தோம். அதனூடாக, வேகமான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய புரோட்பான்ட் சேவைகளை வழங்கி, நாட்டின் டிஜிட்டல் திறனை மேம்படுத்தியிருந்தோம். SLT குழுமம் தன்வசம் நாட்டின் மாபெரும் டேட்டா நிலையங்களைக் கொண்டுள்ளது. சர்வதேச ரீதியில் ஜாம்பவான்களாகத் திகழும் Microsoft, Oracle மற்றும் vmware போன்றவற்றுடன் நாம் நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மைகளினூடாக, பொது மக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாரிய கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான ஹோஸ்டிங் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் சகல வசதிகளையும் கொண்டுள்ளோம். உட்கட்டமைப்பு வசதிகளில் நாம் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாடு இன்று எதிர்நோக்கியுள்ள மற்றும் நாளை எதிர்நோக்கவுள்ள சவால்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் தீர்வுகளில் நாம் கவனம் செலுத்துகின்றோம். இலங்கையில் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் செயற்கட்டமைப்பு மாற்றத்துக்கு டிஜிட்டல் முறையில் SLT-MOBITEL தயாராக உள்ளது.” என்றார்.

செயற்கட்டமைப்பு மாற்றத்தின் கீழ், SLT-MOBITEL இனால் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தப்படும் துறைகளாக விவசாயம், சுற்றுலா, சட்டம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியன அடங்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .