2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் 15 ஏக்கர் கடற்பரப்பில் கடலட்டை உற்பத்தி

Menaka Mookandi   / 2014 நவம்பர் 10 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

மன்னார் மாவட்டத்தில் 15 ஏக்கர் கடற்பரப்பில் கடலட்டை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட நீர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரி பா.நிருபராஜ் திங்கட்கிழமை (10) தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட சவுத்பார், இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம், தேவன்பிட்டி ஆகிய இடங்கள் உள்ளடங்கலாக 6 இடங்களில் கடலட்டை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 கிலோகிராம் கடலட்டையின் விலை இலங்கை ரூபாயில் 27,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எமது பிரதேச மக்கள் கடலட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளாததால் உள்ளூர் கொள்வனவு குறைவாகவே உள்ளது.

இதனால் கடலட்டை உற்பத்தி முற்று முழுதாக ஏற்றுமதியை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடலட்டை பிடிப்பதோ அல்லது அழிப்பதோ தடை செய்யப்பட்டுள்ள போதும் செயற்கை இனவிருத்தி மூலம் கடலட்டை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவற்றுக்கு தடை இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .