2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  மேலும்  இந்திய மீனவர்கள் 30 பேரை தலைமன்னார் கடற்பரப்பில்   இன்று வியாழக்கிழமை (11)  அதிகாலை  கைதுசெய்ததாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின்
உதவிப் பணிப்பாளர் வி.ஸ்.மெராண்டா தெரிவித்தார்.

06 படகுகளில் வந்த இந்த மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், இந்த மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விசாரணையின்  பின்னர் 30 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, கடந்த திங்கட்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ஒரு சிறுவன் உட்பட இந்திய மீனவர்கள் 06 பேரும்  நேற்று புதன்கிழமை (10)  மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது 06 மீனவர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .