2025 ஜூலை 16, புதன்கிழமை

கிளிநொச்சியில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 7,500 குடும்பங்களுக்கு நிவாரணம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 7,500 குடும்பங்களுக்கு, வரட்சி நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் புதன்கிழமை (17) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவந்த வரட்சி காரணமாக, 29 ஆயிரத்து 294 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் குடிநீருக்கான தட்டுப்பாட்டை எதிர்கொண்டதுடன், இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் ரீதியாக (விவசாயம், மீன்பிடி) பாதிக்கப்பட்டு வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
 
இதனால், இவர்களின் அன்றாட உணவு தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையும் காணப்பட்டது.

இதனையடுத்து, வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 7,500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு வரட்சி நிவாரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .