2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

1,363 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் மூவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 24 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை  கடற்கரை பகுதியில், இன்று (24) அதிகாலை 1 கிலோ 363 கிராம் உலர்ந்த மஞ்சல் கட்டி மூடைகளுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிலாவத்துறை - அல்லிராணி கோட்டைக்கு மேற்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில், சிலாவத்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 26 மூடைகளில், பொதி செய்யப்பட்டிருந்த 1 கிலோ 363 கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டிகளை கைப்பற்றினர்.

சந்தேகநபர்களிடம் இருந்து, படகும் படகின் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .