2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

16 மாத காலப்பகுதியில், 3 ஆயிரத்து 672 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் சார்ப் நிறுவனம், கடந்த 16 மாத காலப்பகுதியில், 3 ஆயிரத்து 672 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்;, கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 903 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 3 ஆயிரத்து 672 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.

முன்னாள் போராளிகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கும் வகையில், இந்நிறுவனத்தில் 118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 11 பெண் பணியாளர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X