2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வாக்குச்சாவடிகளில் பெரும்பான்மையின வாக்குப்பதிவு அதிகாரிகள்: செல்வம் எம்.பி புகார்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'நாளை சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள வடமாகண சபை தேர்தலுக்காக மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்ட தமிழ் விசேட வாக்குப்பதிவு அதிகாரிகளின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு சிங்கள விசேட வாக்குப்பதிவு அதிகாரிகள்; நியமிக்கப்பட்டுள்ளதாக' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் கட்சி தலைமையூடாக தேர்தல் திணைக்கள அதிகரிகளிடமும், தேர்தல் கண்காணிப்புக் குழுக்களிடமும் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்காக மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்பிற்காக 25 தமிழ் விசேட வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த தமிழ் அதிகாரிகளின் கடமைகள் மட்டுப்படுத்தப்பட்டு தேசிய அடையாள அட்டை மாத்திரமே பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய சகல கடமைகளையும் சிங்கள அலுவலர்களே மேற்கொள்ளவுள்ளனர். இவர்களுடன் முஸ்ஸிம் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த வாக்குச்சாவடிகளில் பல்வேறு மோசடிகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இதனை கருத்திற்கொண்டே தேர்தல் கண்காணிப்புக்குழுவிடமும், தேர்தல் திணைக்களத்திடமும் முறையிட்டுள்ளதாகவும் செல்வம் எம்.பி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .