2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வாக்களித்த இருவர் கைதாகி விடுதலை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துவிட்டு வெளியில் வந்து நண்பர்களுடன் உரையாடிகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இருவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் கருங்கண்டல் ம.வி பாடசாலையின் அதிபரான அருட்சகோதரர் செபஸ்தியாம் பிள்ளை கிறிஸ்ரி விஜயதாசன் , ஆசிரியை ஜோதினி குரூஸ் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு  மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு விட்டு வெளியில் வந்து நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போதே இவ்விருவரும்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டே கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .