2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மன்னாரில் கைதான மூவரையும் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், முருங்கன் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்ட மூவரையும் தொடர்ந்து 14 நாட்களுக்கு வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில்  அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைது செய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்கள் முருங்கன் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய தொடர்ந்தும் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரையும் இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், சந்தேகநபரிகளிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் 14 நாட்கள் விசாரணைகளை மேற்கொள்ள வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதோடு குறித்த மூவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .