2025 ஜூலை 24, வியாழக்கிழமை

காட்டு யானைகளின் தொல்லைகளால் கற்குளம் பகுதி மக்கள் அச்சம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா, கற்குளம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதால் தாங்கள் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கற்குளம் பகுதியில் காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதுடன் பெருமளவான பயன்தரு மரங்களையும் பயிர்களையும்; அழித்து வருகின்றன.

கடந்த காலங்களில் குறித்த பகுதியில் எந்த விதமான காட்டு விலங்குகளோ அல்லது யானைகளின் தொல்லைகளோ இன்றி தாங்கள் வாழ்ந்து வந்ததுடன் பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த யானைகள் தென்பகுதியில் வளர்க்கப்பட்டு, பின்னர் இப்பகுதி காடுகளில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகப்படுகின்றனர்.

அத்துடன், காட்டு யானைகளை கட்டுப்படுத்தி தமது பயிர்களையும் பயன்தரு மரங்களையும் பாதுகாக்க உதவ வேண்டுமென உரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .