2025 ஜூலை 16, புதன்கிழமை

வெடி விபத்தில் சிறுவன் படுகாயம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில், குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் ராஜ்குமார் டினோசன்  என்ற 10 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சனிக்கிழமை (13) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

காணியொன்றில் எரிந்து கொண்டிருந்த குப்பைகளில் இருந்து பாரிய சத்தத்துடன் வெடிபொருளொன்று வெடித்துள்ளது. இதன்போது, அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் கழுத்துப் பகுதியில் வெடிபொருளின் பாகங்கள் தாக்கி நிலையில் சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.

இது தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .