2025 ஜூலை 16, புதன்கிழமை

காட்டு மரங்களை வெட்டியவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் அனுமதியின்றி காட்டு மரங்களை வெட்டிய சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர், செவ்வாய்க்கிழமை (16) பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, பளை பகுதியில் ½ போத்தல் கசிப்புடன் பிடிக்கப்பட்ட 4 நபர்களுக்கு நீதவான் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

மேற்படி நபர்கள் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு புதன்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, நால்வரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, நீதவான் அபராதம் விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .