2025 ஜூலை 16, புதன்கிழமை

ஆமைகள் வைத்திருந்தவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் 7 ஆமைகளை வைத்திருந்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று புதன்கிழமை (17) தீர்ப்பளித்தார்.

அத்துடன், நபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைகளை பாலாவி குளத்தில் விடும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

பூநகரி, பாலாவி குளத்திலிருந்த 7 ஆமைகளையும் பிடித்து தன்வசம் வைத்திருந்த நபரொருவரை நாச்சிக்குடா பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (16) கைது செய்தனர்.

தொடர்ந்து, இந்நபரையும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஆமைகளையும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) மாலை பாரப்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய ஆமைகள் பாலாவி குளத்தில் வியாழக்கிழமை (18) விடப்பட்டுள்ளதாக நாச்சிக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .