2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சாளம்பைக்குளத்துக்கு மின்சாரம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம்  கிராமத்துக்கு நேற்று திங்கட்கிழமை (22) மின்விநியோகிக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து 23 வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இக்கிராமத்தில் 250 வரையான குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இவர்களுக்கு   'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் மின்விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும் வன்னி அபிவிருத்திக்குழுவின் தலைவருமான ரிசாட் பதியுதீன்,  வடமாகாண ஆளுநரின் இணைப்பாளர் ஐ.எஸ்.எம்.முகைதீன், வடக்கின் வசந்தம் மின்விநியோக மாவட்ட பொறுப்பதிகாரி  மைதிலி தயாபரன், வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் அப்துல்பாரி, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .