2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான்ஆனந்தி கனகரட்ணம் இன்று புதன்கிழமை(24) உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்கள் 36 பேரை, இன்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த 9 ஆம் திகதி, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து, கடந்த 11ஆம் திகதி 6 படகுகளில் வந்து மீன் பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த 36 இந்திய மீனவர்களும் இன்று 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .