2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பளையில் மேலும் ஆயுதங்கள் மீட்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


பளை, முன்னையடி பகுதியிலுள்ள தனியார் காணியிலுள்ள கிணற்றில் இருந்து மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் இன்று (29) மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கிணற்றை  இன்று மேலும் துப்பரவு செய்யும் போது, 4 ஆர்.பி.ஜி குண்டுகள் மற்றும் 94 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

மேற்படி கிணற்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (28), 10 ஆர்.பி.ஜி. குண்டுகள்   மற்றும் 23  கைக்குண்டுகள்  மீட்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தொடர்ந்து அக் கிணற்றிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட அனைத்து குண்டுகளும் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மூலம் செயலிழக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .