2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இனப்பிரச்சினையில் அரசியல் கலந்துள்ளது: சி.வி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இப்பிரச்சினைகளில் அரசியல் கலந்திருப்பதை நான் அறிகின்றேன். அரசியல் காரணங்களினாலேயே மக்கள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை தெரிந்து கொண்டுள்ளோம் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, மன்னார் மாவட்டத்தில் நடக்கின்ற பிரச்சினைகள் தொடர்பான விளக்கங்களை முதலமைச்சருக்கு வழங்கிய ஆயர், அது தொடர்பான தரவுகளையும் வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நீண்ட காலமாக மன்னார் ஆயருடன் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. பல காலமாக அவருடன் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். அதற்கான சந்தர்ப்பம் இன்று தான் அமைந்தது என தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'பல்வேறு விடையங்கள் குறித்து மன்னார் ஆயருடன் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். மன்னார் ஆயர் அவர்கள் இங்கு இடம்பெறுகின்ற சகல பிரச்சினைகளையும் முற்றாக அறிந்தவர். அவருடைய கருத்துக்களை நாங்கள் மதிக்கின்றோம். அந்த வகையில் அவரிடமிருந்து பல விடயங்களை தேடி அறிந்து கொண்டோம்.

மன்னார் ஆயருடன் கலந்து பேசியதில் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை தெரிந்து கொண்டுள்ளோம். வடமாகாண சபை என்ற வகையில் குறித்த பிரச்சினைகளுக்கு நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் உறுப்பினர்களோடு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்போம்' என அவர் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகள், காணி விவகாரம், வாழ்வாதார பிரச்சினைகள், இனப்பிரச்சினை, அவற்றுக்கான தீர்வுகள் என்பன தொடர்பில் ஆயருடன் விரிவாக ஆராய்ந்தோம். ஆகவே, அவற்றினுடைய தார்ப்பரியங்கள் என்னவென்று அறிந்து, அதற்குறிய நடவடிக்கைகளை எம்மால் முடியுமான அளவிற்கு செய்வோம் என முதலமைச்சர் கூறினார்.

இப்பிரச்சினைகளில் அரசியல் கலந்திருப்பதை நான் அறிகின்றேன். அரசியல் காரணங்களினாலேயே மக்கள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை தெரிந்து கொண்டுள்ளோம். ஆனால் எங்களுக்கு மக்களுடைய நன்மை, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது தான் முக்கியமே தவிர அரசியல் எமக்கு தேவையற்ற விடயம். ஆனால், எல்லாவற்றையும் கொண்டு வந்து அரசியலுக்குள் மாட்டி விட்டதனால் தான் பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்குகின்றோம். இவை தொடர்பில் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .