2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி, புளியம்பொக்கனை பெரியகுளம் பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (12) காலையில் இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

அதேயிடத்தைச் சேர்ந்த கிருபாகரன் சிவரூபினி (வயது 24) என்ற 1 ½ வயதுக் குழந்தையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். 

இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். 

சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகம் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .