2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிலாபத்துறை கடற்கரையில் 201 கிலோகிராம் கஞ்சா பொதி மீட்பு

Princiya Dixci   / 2015 மே 22 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபத்துறை கடற்கரை பகுதியில் பொதி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை (21) இரவு சிலாபத்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த பொதியை மீட்டு சோதனை செய்துள்ளனர்.

இதன்போது 95 பொதிகளை கொண்ட 201 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .