2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புகைத்தல் பொருள் விற்ற வர்த்தகர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி பகுதியில் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பில் பிடிக்கப்பட்ட 20 வர்த்தகர்களுக்கும் தலா 4,000 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (10) தீர்ப்பளித்தார்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினர் சாவகச்சேரி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையில் 20 வர்த்தகர்களும் பிடிக்கப்பட்டனர்.

வர்த்தகர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு புதன்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .