Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேரை நேற்று வெள்ளிக்கிழமை (12) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நபர் தொடர்ந்து வழக்குகளுக்கு ஆஜராகாமையால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (13) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago