2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அதி கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை

Freelancer   / 2022 மார்ச் 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் நகர பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் சில பொருட்களில் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு மேலதிகமாக பணம் அறவிடப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கோதுமை மா,மிளகாய்த்தூள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்கள் பல இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

மேலும், முட்டை ஒன்று 27 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த வாரம் தலைமன்னார் பியர், பேசாலை, சிலாபத்துறை, முருங்கன் மற்றும் பண்டிவிரிச்சான் ஆகிய கிராமங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில்   முன்னெடுத்த திடீர் பரிசோதனையின் போது 12 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு பொருட்களை விற்றமை, காலாவதியான உணவுப் பொருட்களை விற்ற மை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த 12 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X