2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆசிகுளத்தில் விவசாய செய்கையை துவம்சம் செய்த யானை

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 25 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன்

வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த காணிக்குள் புகுந்த யானை அங்கிருந்த நெற் செய்கையை மிதித்து துவம்சம் செய்துள்ளது. 

ஆசிகுளம் வயல் பகுதியில் தொடர்ச்சியாக யானையின் பாதிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் நேற்று இரவும் யானை ஒரு ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலத்தை சேதப்படுத்தியுள்ளது. 

பசளை இன்மையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது யானையின் பாதிப்புக்களுக்கும் முகம் கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X