2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆனையிறவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

Editorial   / 2023 நவம்பர் 10 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. தமிழ்ச்செல்வன்

கஞ்சாவுடன் பயணித்த இளைஞன் ஒருவனை ஆனையிறவு வீதி சோதனை  நிலையத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவு கைது செய்யப்பட்டுள்ளது

கிளிநொச்சி ஆனையிறவு வீதி சோதனை நிலையத்தில் வியாழக்கிழமை (09)   மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைபொருளுடன் இளைஞர் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிறவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன்  390 கிராம் கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பளை பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X