2025 ஜூன் 07, சனிக்கிழமை

ஆரம்ப மருத்துவ வெளிநோயாளர் பிரிவு திறந்து வைப்பு

எஸ்.என். நிபோஜன்   / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பிரமந்தனாறில் ஆரம்ப மருத்துவ வெளிநோயாளர் பிரிவு கட்டடம் இன்று (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன் கட்டடத்தை திறந்து வைத்தார்.

பிரமந்தனாறு, புன்னைநீராவி கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் ஆரம்ப சுகாதார தேவைகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடமாகாண சுகாதார அமைச்சினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் த.குருகுலராஜா, சு.பசுபதிபிள்ளை, வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .