2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இடிந்து விழுந்த கிணறை புனரமையுங்கள்

Kogilavani   / 2016 நவம்பர் 07 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் இம்மாஸ் நகரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  இடிந்து விழுந்த பொதுக்கிணறு, இதுவரை புனரமைக்கப்படாமையால், தாம் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இம்மாஸ் நகரில் நாற்பதுக்கும் மேற்பட்ட இக்கிணற்றை குடிநீருக்கா பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கிணற்றை புனரமைத்துத் தாருங்கள் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தப் போதிலும் அக்கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படவில்லை என பிரதேவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்கின்ற கிராமங்களில் ஒன்றாக அக்கராயன் கிராமமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கத.  எனவே, உரிய அதிகாரிகள் இக்கிணற்றை புனரமைபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .