2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களுக்கு மறியல்

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

இலங்கை கடற்பரைப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவா்கள் 9 பேரையும், மார்ச் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊா்காவற்றுறை நீதிமன்ற நீதவான் அந்தோணிப்பிள்ளை ஜூட்சன், இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இந்திய மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்புக்குள், இன்று (26) அதிகாலை இரண்டு விசைப்படகுகளுடன் நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே, எலாரா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீகவர்களை ஊா்காவற்றுறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .