2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

இயக்கச்சியில் கஞ்சாவுடன் பெண் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என். நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார், கே. மகா

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையில், இயக்கச்சி பகுதியில் வைத்து, 4.7 கிலோகிராம் கஞ்சாவுடன் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் விசேட பிரிவினரால் குறித்த பெண் இன்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளாா்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் 32 வயதுடையவா் எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .