Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 நவம்பர் 21 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 33 அடியாக உயர்வடைந்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பொறியிலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் கொள்ளளவு 36 அடியாகக் காணப்பட்ட போதும், 1983ஆம் ஆண்;டு காலப்பகுதியில் குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்புக்காரணமாக 30 அடிக்கு மேலான நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் 2016ம் ஆண்டு இரணைமடுக்குளத்தின் கீழான கமக்கார அமைப்புக்களின் கோரிக்கைக்கு அமைய இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வாண்டு இதுவரை இரணைமடுக்குளத்தின் நீர் கொள்ளளவு 33 அடியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
29 minute ago
35 minute ago