Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில், சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து இழுத்தடிப்புகளையே செய்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
கிளிநொச்சி – அக்கராயனில், நேற்று (18) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த 70 ஆண்டுகளாக தமிழர் பிரச்சினைத் தீர்வுகளுக்காக எடுக்கப்பட்ட பல முயற்சிகள் கைகூடாமல் சென்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆயுதங்கள் மௌனிப்பதற்கு முன்னர், தமிழர்களிடம் பேரம் பேசக் கூடிய வல்லமையும் தமிழர்களுக்கு தீர்வை வழங்குவோமென்று சர்வதேசத்துக்கு கூறிய நிலைமையும் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .