2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

ஓமந்தையில் கிண்ணியா இளைஞர்கள் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஓமந்தை பகுதியில், தன்வசம் கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞர்களை, வன்னிப் பிராந்தியப் போதைத் தடுப்புப் பிரிவினர், இன்று (04) கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமந்தைப் பகுதியில், இன்றுக் காலை சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்த போது, அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட 7 கிலோ 900 கிராம் கஞ்சாவை, போதைத் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர்.

இதையடுத்து, வாகனத்தில் இருந்த மூன்று இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .