2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காணாமல் போன குடும்பஸ்தரை 'கண்டுபிடிக்க உதவுங்கள்'

George   / 2017 மே 09 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையை கடந்த 2ஆம் திகதி முதல் காணவில்லை” என அவரது மனைவி, மன்னார் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை(6) முறைப்பாடு செய்துள்ளார்.

“62 வயதுடைய டி.யேசு மரியதாஸ் ஆகிய தனது  கணவர், மன நோயினால் பாதிக்கப்பட்டவர். கடந்த 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரை தேடிய போதும் அவர் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை” என,  மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

காணமல் போன போது, கறுப்பு நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற  டீ-சேட் அணிந்திருந்ததாக , மனைவு கூறியுள்ளார்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0232222934 மற்றும் 077 3817516 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .