2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கேப்பாப்புலவு கிராமத்துக்கான பஸ் சேவை வேண்டும்

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக் கிராமத்துக்கான பஸ் சேவையை நடத்துமாறு இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2012ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் தமது சொந்தக் காணிகளில் குடியமர்த்தாமல் இராணுவம் உருவாக்கிய மாதிரிக் கிராமத்திலே குடியமர்த்தப்பட்டுள்ளோம். எமக்கான பஸ் சேவைகள் நடைபெறாததன் காரணமாக, வற்றாப்பளைச் சந்தி வரை நடந்து சென்றே முல்லைத்தீவு நகரத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகள், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றிற்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் கேப்பாப்புலவின் 250இற்கு மேற்பட்ட குடும்பங்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் வற்றாப்பளை வரை நடைபெறும் பஸ் சேவைகளை கேப்பாப்புலவு வரை நடத்துமாறு அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .