Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 22 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிள்ளளையார் ஆலய குருக்கள் சி.கணேசசர்மாவின் வீட்டில் நேற்று நள்ளிரவு திருடர்கள் திருட முயற்சிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குருக்களின் வீட்டு யன்னல் கண்ணாடிகள்; உடைக்கப்பட்டு முதிரைக்கதவும் கொத்தி உடைக்கப்பட்டுள்ளது.
உடைக்கப்பட்ட கதவை குருக்களும் இருபுதல்வர்களும் இறுக்கத்தள்ளிப் பிடித்துக்கொண்டு அயல்மக்களை அலைபேசி ஊடாக அழைத்துள்ளனர்.
அச்சமயம் உடைக்கப்பட்ட கதவின் ஊடாக திருடர்கள் கோடாரியால் எறிந்து குருக்களை தாக்கியுள்ளனர்.
பின்னர், அயலவர்கள் ஒன்றுகூடியதனால் உடனடியாக திருடர்கள் இரும்புக் கம்பிகளால் உயர்மின் கம்பிகளுக்கு எறிந்து மின்தடையை எற்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக முல்லைத்தீவு பொலிஸார் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
32 minute ago