2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு காய்ச்சியவருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பளைப் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணம் என்பவற்றை உடமையில் வைத்திருந்த இரண்டு பேருக்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று வியாழக்கிழமை (08) தீர்ப்பளித்தார்.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 35 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பவற்றை உடமையில் வைத்திருந்த ஒருவருக்கு 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் பதினைந்து நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, 225 போத்தல் கோடாவினை உடமையில் வைத்திருந்த ஒருவருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .