2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கம்பரலிய திட்டத்தின் கீழ் கரைச்சியில் 15 வீதிகள் புனரமைப்பு

எஸ்.என். நிபோஜன்   / 2018 நவம்பர் 19 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய வேலைத்திட்டமான கம்பரலிய திட்டத்தின் கீழ் 15 உள்ளக வீதிகள் புனரமைக்கப்படுகின்றன என கரைச்சி பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் எஸ்.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 உள்ளக வீதிகளுக்கும் தலா 2 மில்லியன் ரூபாய் வீதம் 30 மில்லியன் ஒதுக்கப்பட்டு குறித்த வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள வீதி, இரத்தினபுரம் கண்ணன்  கோவில் வீதி, நீதிமன்ற அருகாமை வீதி, பாராதிபுரம் செபஸ்ரியார் வீதி உள்ளிட்ட 15 வீதிகள் தார் வீதியாக புனரமைக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .